கும்பகோணம்: கும்பகோணம் படிதாண்டா பரமேஸ்வரி கோயில் பச்சைகாளி, பவளக்காளி திருநடன உற்சவம் நேற்று நடந்தது. கும்பகோணம் கும்பேஸ்வரர் தெற்கு வீதியில் உள்ள படிதாண்டா பரமேஸ்வரி கோயிலில் ஒவ்வொரு தை மாதமும் காப்பு கட்டி உற்சவத்தை 7 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இக்கோயிலின் கரக உற்சவத்துக்காக கடந்த 29ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.