புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 24ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 3ந் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழச்சியான தேரோட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து திருப்பூர் காட்டுமாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சாமிதரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரியை கொண்டு வந்தனர்.