3 டைரக்டர்களுடன் பணியாற்றுகிறேன்: விஷால் நெகிழ்ச்சி

சென்னை: விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஹரி இயக்கி வருகிறார். இதில் பிரியாபவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜீ ஸ்டுடி யோஸ் சவுத் மற்றும் இயக்கு னர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் நடிக்க இணைந்துள்ளனர். இதை விஷால் தனது சமூக வலைத் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில், ‘3 இயக்குனர்களுடன் சேர்ந்து ஒரே படத்தில் நான் பணியாற்றி வருகிறேன்’ என்று விஷால் நெகிழ்ச்சியுடன்
தெரிவித்துள்ளார்.

The post 3 டைரக்டர்களுடன் பணியாற்றுகிறேன்: விஷால் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: