பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியில் பிரசித்திபெற்ற கோயிலான சுப்பிரமணிய சாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர விருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டில் நேற்று,  பங்குனிஉத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், அதன்பின் மகா தீபாரதனையும் நடைபெற்றது. பின், மாலையில் சுப்பிரமணியசாமி, வள்ளி, தேவசேனா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இரவில் சுப்பிரமணியசாமி சித்திரத்தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வரும்போது, பக்தர்கள் பலர் பூஜை செய்து வழிபட்டனர். அதுபோல் வெங்கடேசா காலனியில் உள்ள ஐயப்பன் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை, மதியம், இரவு என மூன்ற நேரம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது….

The post பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: