வண்டல் மண் எடுக்க 3ம் தேதி முதல் இணையதள அனுமதி

சென்னை: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், 6 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட ஊரகவளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஏரிகள் மட்டுமல்லாமல் தாலுகாவில் உள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ளலாம். எனவே, விவசாயிகள் வரும் ஜுலை 3ம் தேதி முதல் இ-சேவை மையங்கள் மூலமாக, இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

The post வண்டல் மண் எடுக்க 3ம் தேதி முதல் இணையதள அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: