பாமாயில், துவரம் பருப்புகளை அடுத்த மாதம் பெற்றுக் கொள்ளலாம்

சென்னை: பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை அடுத்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை 2024 மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து துரித ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜூலை மாத துவக்கத்திலிருந்து மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post பாமாயில், துவரம் பருப்புகளை அடுத்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் appeared first on Dinakaran.

Related Stories: