கர்நாடகா: மைசூரில் மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து ரூ.390 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்தனர். ரூ.390 கோடி போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக 4 பேரை மும்பை போலீஸ் கைது செய்தது. தொழிற்சாலையில் இருந்து ரூ.381.96 கோடி மதிப்புள்ள 187.97 கிலோ மெபெட்ரோனை குழு பறிமுதல் செய்தது. இந்த சோதனையில் மருந்து உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் ரசாயனங்கள் மீட்கப்பட்டன.
The post மைசூரில் ரூ.390 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.