திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் தேர் செல்வதற்கு சாலை அகலப்படுத்தும் பணிக்கான களஆய்வை மேற்கொண்டார் அமைச்சர் எ.வ.வேலு..!!

சென்னை: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் தேர் செல்வதற்கு சாலை அகலப்படுத்தும் பணிக்கான களஆய்வை அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்டார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை இன்று (22.05.2025) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்கள். “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள தேர் செல்வதற்கான வழிகளையும், அங்கு மேற்கொள்ளப்படவுள்ள சாலை விரிவாக்கப் பணிகளையும் களஆய்வு செய்தார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் 2 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் ஆய்வு செய்து,

கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் முனைவர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப. இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) .இரா.சந்திரசேகர் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டிள்ளது.

 

The post திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் தேர் செல்வதற்கு சாலை அகலப்படுத்தும் பணிக்கான களஆய்வை மேற்கொண்டார் அமைச்சர் எ.வ.வேலு..!! appeared first on Dinakaran.

Related Stories: