புகையிலை பொருட்கள் விற்பனை

 

வேப்பூர், ஜூலை 21: வேப்பூர் அடுத்த ஆறுமுகம் நகரை சேர்ந்த வெங்கடேசன்(31) என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரின் கடைக்கு போலீசார் சென்று சோதனை மேற்கொண்டதில், கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதே போல் வேப்பூர் பங்களா தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற அப்துல் அலி என்பவரையும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: