இந்நிலையில் பிரத்திபாடு இன்ஸ்பெக்டர் சீனிவாசராவ், தாடேப்பள்ளி இன்ஸ்பெக்டர் வீரேந்திரபாபு, நல்லபாடு எஸ்.ஐ. தலைமையில் போலீசார் நேற்று மாலை தாடேபள்ளியில் உள்ள ஜெகன்மோகன் வீட்டுக்கு சென்று, விபத்து ஏற்படுத்திய குண்டு துளைக்காத காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த பிப்ரவரி 19ம் தேதி எம்எல்சி தேர்தல் நடத்தை விதிகளை மீறி, விவசாய விளைபொருட்கள் பிரிவு சந்தை நடந்த இடத்தில் மிளகாய் விவசாயிகளை சந்தித்து அரசியல் உரை நிகழ்த்தினார். இதனால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஜெகன்மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் அம்பதி ராம்பாபு, கட்சி தலைவர்கள் லெல்லா அப்பிரெட்டி, காவதி மனோகர் நாயுடு, மொடுகுல வேணுகோபால் ரெட்டி மற்றும் பலர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
The post ஆந்திராவில் எம்எல்சி தேர்தல் விதிகளை மீறி விவசாயிகளை சந்தித்த ஜெகன்மோகன் மீது வழக்கு appeared first on Dinakaran.
