ஓட்டல் அறையில் காதலனுடன் ஜாலி: கணவரிடம் சிக்கியதால் 12 அடி உயரத்தில் இருந்து குதித்து எஸ்கேப்

பாக்பாத்: உத்தரப்பிரதேசத்தின் பாக்பாத் மாவட்டத்தில் உள்ள பாரவுட் நகரை சேர்ந்த திருமணமான பெண், வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் திங்களன்று தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் கள்ளக்காதலனுடன் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஆனால் அந்த பெண்ணை பின்தொடர்ந்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வந்துள்ளனர். இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக ஜன்னல் வழியாக வெளியேறி 12 அடி உயரத்தில் ஓட்டலின் மேற்கூரையில் இருந்து கீழே குதித்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதனை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதில் தனது மனைவிக்கு திருமணத்துக்கு முன்பே பலரிடம் தகாத உறவு இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கொன்றுவிடுவேன் என்று தன்னை மிரட்டுவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஓட்டல் அறையில் பெண்ணுடன் தங்கி இருந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

The post ஓட்டல் அறையில் காதலனுடன் ஜாலி: கணவரிடம் சிக்கியதால் 12 அடி உயரத்தில் இருந்து குதித்து எஸ்கேப் appeared first on Dinakaran.

Related Stories: