இதற்கிடையே சென்னை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது. விடுமுறை நாட்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. இதையும் மீறி வகுப்புகள் நடத்தி மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
The post பள்ளிகளில் கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.
