இதையடுத்து, போலீசார் உதவியுடன் குடியுரிமை அதிகாரிகள் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென சையது ஜான் உயிரிழந்தார். இதையடுத்து அவருடன் வந்த 2 பாகிஸ்தானியர்கள், நேற்று முன்தினம் அதிகாலை சென்னையில் இருந்து எத்தியாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் அபுதாபி வழியாக, பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு திரும்பி சென்றனர். உயிரிழந்த சையது ஜானின் உடல் பதப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம், இலங்கை வழியாக பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
The post சிகிச்சைக்காக சென்னை வந்தபோது மரணம் பாகிஸ்தான் வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.
