இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள சாக்ரமான்டோவிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த ஹர்பிரீத்தை அமெரிக்க புலனாய்வு(எப்பிஐ) அதிகாரிகள் கைது செய்தனர். எப்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய ஹர்பிரீத் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நவீன போன்களை பயன்படுத்தி வரும் அவர் போலீசுக்கு பிடி கொடுக்காமல் தப்பி வந்துள்ளார். ஹர்பிரீத் சிங் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் பாபர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் சேர்ந்த பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபர்களை கைது செய்வதில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதை இந்த வழக்கு எடுத்து காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இந்தியாவில் என்ஐஏவால் தேடப்பட்டவர் அமெரிக்காவில் எப்பிஐயால் கைது appeared first on Dinakaran.
