தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக வடதமிழகத்தில் வெப்பக்காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 6 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

மேலும் திருச்சி, திருத்தணி, வேலூர், சேலம் மதுரை ஆகிய பகுதிகளிலும் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தருமபுரி, சென்னையில் தலா 97 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக வால்பாறையில் 84 டிகிரி பாரன்ஹீட், குன்னூரில் 76 டிகிரி பாரன்ஹீட், உதகையில் 70 டிகிரி பாரன்ஹீட், கொடைக்கானலில் 69 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில் appeared first on Dinakaran.

Related Stories: