சென்னை: வடபழனி அருகே 14 வயது சிறுவன் கார் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில், காயமடைந்த முதியவர் மகாலிங்கம் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது 4 பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு; தந்தை ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளார்.