பெண் யானைக்காக நடந்த மோதலில் ஆண் யானை பலி


தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மாமரத்துப்பள்ளம் பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு குட்டை போல் தேங்கிக் கிடந்த தண்ணீரில் ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. அந்த யானை கடந்த 5ம் தேதி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பெட்டமுகிலாளம் கால்நடை மருத்துவர் மணிகண்டன் மற்றும் குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

இதில், உயிரிழந்த யானைக்கு சுமார் 40 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. அந்த யானையின் உடலில் காயங்கள் இருந்தன. இதையடுத்து, யானையின் இரண்டு தந்தங்களும் கைப்பற்றப்பட்டது. பெண் யானைக்காக மற்றொரு ஆண் யானையுடன் ஏற்பட்ட மோதலில், அந்த யானை உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த யானையின் உடல், அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post பெண் யானைக்காக நடந்த மோதலில் ஆண் யானை பலி appeared first on Dinakaran.

Related Stories: