இந்த நிலையில் விமானத்தை, வானில் பறக்கச் செய்தால் பெரும் ஆபத்து என்பது உணர்ந்த விமானி, உடனடியாக ஓடுபாதையில் அவசரமாக விமானத்தை நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, பழுதடைந்த இயந்திரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், இயந்திரக் கோளாறு சீர் செய்யப்பட்டு சுமார் 2 மணி நேரம் தாமதமாக, 7.40 மணியளவில் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டு சென்
றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி, சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
The post சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.