சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

சென்னை: சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் திடீரென்று இயந்திர கோளாறு காரணமாக ஓடுபாதையில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 5.45 மணியளவில் இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 154 பேர் இருந்தனர். இந்த விமானம் அதிகாலை 5:45 மணிக்கு புறப்பட வேண்டியது சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக, காலை 6 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

இந்த நிலையில் விமானத்தை, வானில் பறக்கச் செய்தால் பெரும் ஆபத்து என்பது உணர்ந்த விமானி, உடனடியாக ஓடுபாதையில் அவசரமாக விமானத்தை நிறுத்திவிட்டு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, பழுதடைந்த இயந்திரங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், இயந்திரக் கோளாறு சீர் செய்யப்பட்டு சுமார் 2 மணி நேரம் தாமதமாக, 7.40 மணியளவில் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டு சென்
றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி, சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

The post சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: