அதன்படி ஏப்ரல் 29ம் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார். பின்னர் அன்றைய தினமே பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, சுற்றுச்சூழல், நிதித்துறை மற்றும் அரசின் சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட அரசினர் அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அன்றைய தினமே சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.
அரசு விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது. திங்கட்கிழமை (7ம் தேதி) வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி விவாதத்துக்கு பதில் அளிப்பார்.
The post சட்டப்பேரவை கூட்டம் ஒருநாள் முன்னதாக முடிகிறது appeared first on Dinakaran.