தற்போதைய வழிகாட்டுதலின்படி நகையை திருப்பும்போது முழுத்தொகையையும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஏழை மக்கள் அவ்வாறு செலுத்த இயலாமல் போனால், நகைகளை இழக்கும் நிலை ஏற்படும். தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக்கடன்களை பெற இயலும். அதோடு நகர்ப்புறங்களில் ஒரு கிராமுக்கு ரூ.5 ஆயிரம், கிராமப்புறங்களில் ரூ.7,500 வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டினை ஏற்க இயலாது.
இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது. எனவே, தங்க நகைக்கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது, செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர், மனுவிற்கு ரிசர்வ் வங்கியின் தலைமை பொதுமேலாளர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரம் தள்ளி வைத்தனர்.
The post நகைக்கடனுக்கான ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ரத்து கோரி வழக்கு: தலைமை பொதுமேலாளர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.