ஆன்லைனில் 3 பேரிடம் ₹2.44 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி, ஏப். 3: புதுவையில் 3 பேரிடம் ₹2.45 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் குறைந்த விலையில் பழைய போன் விற்பனைக்கு இருப்பதை செல்போனில் பார்த்துள்ளார். பின்னர் அதில் ஒரு செல்போனை ஆர்டர் செய்து, பல்வேறு தவணைகளில் ₹96 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் ஆர்டர் செய்த செல்போன் சரவணனுக்கு கிடைக்கவில்லை, இதுகுறித்து சரவணன் மர்ம நபருக்கு தொடர்புகொண்டபோது, அவர் இணைப்பை துண்டித்து விட்டார். அதன்பிறகே சரவணன் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. மேலும் சரவணன் பேஸ்புக்கில் ஆன்லைன் சூதாட்டத்தில் ₹69 ஆயிரத்தையும் முதலீடு செய்து, மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

தொடர்ந்து மூலகுளம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனைநம்பி தினேஷ், மர்ம நபருக்கு ₹69 ஆயிரத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேலும் லாஸ்பேட்டையை சேர்ந்த சுபாஷினி என்பவர் ₹10 ஆயிரம் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ₹2.44 லட்சத்தை மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆன்லைனில் 3 பேரிடம் ₹2.44 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: