திருச்சி காந்தி மார்கெட் இடம் மாற்றப்படாது: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

திருச்சி காந்தி மார்கெட் இடம் மாற்றப்படாது என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்துள்ளார். திருச்சியில் ரூ.220 கோடி மதிப்பீட்டில் புதிய மார்கெட் அமைக்கப்படும். மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என தனித்தனியே மார்கெட் அமையும். காந்தி மார்கெட்டை சீர் செய்து, பெரிதுபடுத்துவதற்காக ரூ.50 கோடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

 

The post திருச்சி காந்தி மார்கெட் இடம் மாற்றப்படாது: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி! appeared first on Dinakaran.

Related Stories: