அவ்வையார் குறித்து பேரவையில் காரசார விவாதம்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன்(அதிமுக) பேசுகையில் “ வேதாரண்யம் தொகுதி துளியாப்பட்டினத்தில் அவ்வையார் அறிவுக் களஞ்சியம் அமைக்க அரசு முன்வருமா” என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் சாமிநாதன் பேசுகையில்” நிதிநிலைக்கு ஏற்ப முதல்வரின் கவனத்திற்கு கொண்டு அரசு பரிசீலனை செய்யும்” என்றார்.

துரைமுருகன்: அவ்வையார் என்பது ஒருவரல்ல, அவ்வையார் என்பது ஐந்து பேர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறம் செய்ய விரும்பு என பாடும் அவ்வையார் வேறு, புறநானூறு பாடும் அவ்வையார் வேறு. எனவே ஐந்து அவ்வையாரில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார்?.

ஒ.எஸ்.மணியன்: எங்கள் ஊரில் கோயில் வைக்கப்பட்டிருக்கிற, மணிமண்டபம் அமைக்கப்படும் அவ்வையாருக்கு தான் அறிவுக்களஞ்சியத்தை வையுங்கள்.

சபாநாயகர் அப்பாவு: ஐந்து அவ்வையார் இருக்கும் போது வேதாரண்யத்தில் இருக்கும் அவ்வையார் யார் என்பது தான் தற்போதைய கேள்வி.

ஓ.எஸ்.மணியன்: ஒரு காலத்தில் பாடல் பாடிய எழுதியவர்கள் பெண்களாக இருந்தால் அவர்கள் அனைவரையுமே அவ்வையார் என்று அழைத்ததாக தான் சொல்லப்படுகிறது.

துரைமுருகன்: நம்ம வீட்டில் வயசானவர்களை ஆயா என்று அழைப்பது போலவா?.

தங்கம் தென்னரசு: தமிழறிஞர்களுக்கு அமைக்கப்படும் நினைவு மண்டபங்கள், படிப்பகங்களாக அமைய வேண்டும் என்பது முதல்வரின் எண்ணம். எனவே அவ்வையார் அறிவுக்களஞ்சியம் அமைகக் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post அவ்வையார் குறித்து பேரவையில் காரசார விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: