அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கை, கால் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தவர்கள் திருவள்ளூர், சென்னை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கால்கள் துண்டிக்கப்பட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் அரசு (21) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதன்மூலம் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இது கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
The post திருத்தணி விபத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு appeared first on Dinakaran.
