மக்களின் இனத்தினை பாதுகாக்க வேண்டும். அந்த கடமையை நாம் செய்ய வேண்டும். இந்தி மொழியின் ஆதிக்கம் பற்றி உங்களுக்கு தெரியாத ஒன்றும் கிடையாது, இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்ட பல்வேறு மாநிலங்களில் அவர்களுடைய தாய்மொழி காணாமல் போய் உள்ளது. உதாரணத்திற்கு ராஜஸ்தானின் தாய்மொழி இல்லாமல் போய்விட்டது. ஒடிசாவில் ஒரியா மொழி இல்லாமல் போய்விட்டது. இந்தி மொழியில் அப்படி எதுவும் சிறப்பு இருக்கிறதா? என்று கேட்டால் அப்படி ஒன்றும் கிடையாது. உலகின் சிறப்பான செம்மொழி அந்தஸ்தை பெற்றது தமிழ் மொழி மட்டுமே. இவ்வாறு அவர் பேசினார்.
The post இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்ட பல மாநிலங்களில் தாய்மொழி காணாமல் போய் உள்ளது: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு appeared first on Dinakaran.
