ஓசியில் ஐஸ் தர மறுத்த சிறுவன் மீது தாக்குதல்: 3 பேர் கைது

திருவொற்றியூர்: உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் சைக்கிளில் குல்பி ஐஸ் விற்பனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த 3 பேர், ஓசியில் ஐஸ் கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுவன் கொடுக்க மறுத்ததால், சைக்கிளில் கட்டி இருந்த பித்தளை மணியை பிடுங்கி சிறுவனின் தலையில் அடித்து, அவனிடம் இருந்த 100 ரூபாயை பறித்துச் சென்றனர்.

அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆர்கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்டையார்பேட்டை கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜேஷ் (25), அவருடைய நண்பர்கள் பரமேஸ்வர நகரைச் சேர்ந்த சூர்யா (21), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சிவா (19) ஆகிய மூவரை கைது செய்தனர்.

 

The post ஓசியில் ஐஸ் தர மறுத்த சிறுவன் மீது தாக்குதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: