இந்நிலையில் 24 மணி நேர போராட்டம் என்பதால் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் இது என்ன மாவட்ட கலெக்டர் அலுவலகமா? அல்லது டூரிஸ்ட் ஸ்பாட்டா என கேள்வி எழுப்பினர். கலெக்டர் அலுவலகத்தில் அரசின் அத்தனை துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசின் திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்கள் குறைகளை நிறைவேற்றித் தரும் அரசு ஊழியர்களே தீ மூட்டி குளிர் காய்வது வேதனையாகவும், வேடிக்கையாக உள்ளது. ஆனால் இந்த தீயானது காற்றில் பரவி கலெக்டர் அலுவலகத்திற்கு பாதிப்பு ஏற்படாதா என்றும், இது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
The post கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெருப்பு மூட்டி தர்ணாவில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் appeared first on Dinakaran.
