நம் மாவட்டத்தில் ஆவடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சுகாதார குறியீடுகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பணியாளர்கள் பதிவு செய்திட வேண்டும். அதாவது மருத்துவ பணியாளர்கள் பதிவேடு மற்றும் மருத்துவமனைகள் பதிவேடு இரண்டையும் சுகாதாரக் குறியீடுகளில் பதிவு செய்திட வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பதிவிடும் சுகாதார குறியீடுகளை ஒப்பிடாமல் வளர்ந்து வரும் நாடுகளைப் போல சுகாதார குறியீடுகளை பதிவு செய்து விட வேண்டும். ஏனென்றால் சுகாதாரத் துறையில் இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பானதொரு நிலையில் நாம் உள்ளோம்.
எனவே சுகாதாரக் குறியீடுகளை சுணக்கம் இல்லாமல் பதிவேற்றம் செய்திட வேண்டும். அதாவது திருவள்ளுர் மாவட்டம் 100 சதவீதம் சுகாதார குறியீட்டை பதிவு செய்த மாவட்டமாக இருந்திட வேண்டும் என்றார். தொடர்ந்து, சுகாதாரக் குறியீடுகளை சிறப்பாக பதிவேற்றம் செய்த மருத்துவர்களுக்கு கேடயம் மற்றும் பொன்னாடைகளை கலெக்டர் வழங்கி கவுரவித்தார். இதில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் திருவள்ளூர் பிரியா ராஜ், பூந்தமல்லி பிரபாகரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, ஆவடி மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், குடும்ப நல துணை இயக்குநர் சேகர், கிராமோதயா தொண்டு நிறுவனர் தலைவர் உமா ரவிகுமார், குழுவின் தலைவர் சிவகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் கருத்தரங்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
