எனவே, தேயிலை பயிரிட்டு இருந்த விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கொள்முதல் விலை தரத்திற்கு ஏற்றவாறு கிடைத்துவிடுகிறது.ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் இறுதி முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு பனிக்காலம் தொடங்கியதால் தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் கொழுந்துகள் கருக தொடங்கி விட்டன. இதனால் பச்சை தேயிலை சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பனிப்பொழிவின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாப்பதற்காக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளுக்கு கவாத்து செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சில விவசாயிகள் தேயிலை தோட்டத்தில் மேல் கவாத்தும், பிற விவசாயிகள் அடிக்கவாத்தும் செய்கின்றனர். கவாத்து செய்து அகற்றிய இலைகளை, இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக தேயிலைச்செடிகளின் வேர்கள் உள்ள பகுதியில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்.இது குறித்து கோத்தகிரி தேயிலை விவசாயிகள் கூறியதாவது:
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேயிலை செடிகளுக்கு கவாத்து செய்வது மிகவும் சிறந்தது. பனிக்காலங்களில் மேல் காவாத்து செய்தால், தரமான தேயிலை கொழுந்துகள் வளரும். கோத்தகிரி பகுதியில் நவம்பர் மாதம் இறுதி முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
எனவே தேயிலை தோட்டங்களில் கவாத்து செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம். கவாத்து பணி முடிந்த பிறகு தேயிலை தோட்டத்தை சுத்தம் செய்து தேயிலை செடிகளுக்கு அமோனியம் சல்பேட் மற்றும் யூரியா பேஸ் உரங்களை இட்டு முறையாக பராமரித்து வந்தால் மார்ச் மாதத்திற்குள் தரமான தேயிலை கொழுந்துகள் வளர்வதுடன், தேயிலை சாகுபடியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
The post பனிப்பொழிவில் இருந்து பாதுகாக்க தேயிலை தோட்ட விவசாயிகள் கவாத்து பணியில் தீவிரம் appeared first on Dinakaran.
