இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நான் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தேன். எனது புகாரை ஏற்று சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ‘‘சீமான் தெரிவித்த கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மனுதாரரின் புகார் மனுவின் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜன. 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
The post பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு: அவரது கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது என கருத்து appeared first on Dinakaran.
