ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா திடீர் சந்திப்பு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர். சந்திப்பின் போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

கஞ்சா மற்றும் போதை கலாசாராத்தை ஒழிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மதுரை மேலூர் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம் பிரேமலதா மனு அளித்தார்.

 

The post ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: