விவசாயிகள் பறிக்கும் பாக்குகளை பழங்குடியினர் பெண்கள் மற்றும் ஆண்கள் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உரித்த ஒரு கிலோ பாக்கிற்கு ரூ.12 வரை தொழிலாளிக்கு கிடைப்பதாக கூறுகின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.400 வரை கூலி பெறுவதாக கூறுகின்றனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான அய்யன்கொல்லி, எருமாடு, பாட்டவயல், கையுன்னி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பழங்குடியினர் பெண்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post எருமாடு வெட்டுவாடி பகுதியில் பாக்கு உரிக்கும் தொழிலை நம்பி வாழும் பழங்குடியின மக்கள் appeared first on Dinakaran.
