இங்கிலாந்துக்கு எதிராக பாக். அபார வெற்றி

ராவல்பிண்டி: இங்கிலாந்து அணியுடன் நடந்த 3வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ராவல்பிண்டியில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 267 ரன் எடுத்த நிலையில், பாகிஸ்தான் 344 ரன் குவித்தது (சவுத் ஷகீல் 134 ரன்). 77 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 112 ரன்னுக்கு சுருண்டது. ஜோ ரூட் 33, ஹாரி புரூக் 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பாகிஸ்தான் பந்துவீச்சில் நோமன் அலி 6, சஜித் கான் 4 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து 36 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 3.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. சைம் அயூப் 8 ரன்னில் வெளியேறினார். அப்துல்லா ஷபிக் 5 ரன், கேப்டன் ஷான் மசூத் 23 ரன்னுடன் (6 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சவுத்த ஷகீல் ஆட்ட நாயகன் விருதும் (134 ரன்), சஜித் கான் தொடர் நாயகன் விருதும் (72 ரன்னுக்கு 19 விக்கெட்) பெற்றனர்.

The post இங்கிலாந்துக்கு எதிராக பாக். அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: