சில்லிபாயிண்ட்..

* ஒருநாள், டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் மோதவுள்ள பாகிஸ்தான் அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பாபர் ஆஸம், ஷாகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

* ‘அடுத்த சில ஆண்டுகளுக்கு என் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட விரும்புகிறேன்’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐபிஎல் சீசனில் தோனி களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவரது இந்த கருத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

* நியூசிலாந்து அணியுடன் நடந்த முதல் 2 டெஸ்டிலும் தோல்வியைத் தழுவியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வேண்டும் என்றால், எஞ்சியுள்ள 6 போட்டிகளில் (நியூசி.யுடன் 1, ஆஸி.யுடன் 5) இந்தியா 4 வெற்றிகளைக் குவிக்க வேண்டியது கட்டாயம்.

The post சில்லிபாயிண்ட்.. appeared first on Dinakaran.

Related Stories: