வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அபார வெற்றி

பல்லேகலே: இலங்கை -வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இலங்கை வென்ற நிலையில் 2வது போட்டி நேற்று நடந்தது. மழை காரணமாக 44 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 80, குடாகேஷ் மோதி 50 ரன் எடுத்தனர். இலங்கை பவுலிங்கில் வனிந்து ஹசரங்கா 4, அசித்த பெர்னாண்டோ, தீக்‌ஷனா தலா 3 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய இலங்கை அணியில் நிஷான் மதுஷ்கா, சமரவிக்ரமா தலா 38, கேப்டன் சரித் அசலங்கா (நாட்அவுட்) 62 ரன் எடுத்தனர். 38.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் எடுத்த இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது. தீக்‌ஷனா ஆட்டநாயகன் விருது பெற்றார். கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

The post வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: