மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் மறைவுக்கு துரை வைகோ நேரில் ஆறுதல்

திருவள்ளூர்: மதிமுக மூத்த வழக்கறிஞரும், தணிக்கை குழு உறுப்பினருமான இரா.அருணாச்சலம் கடந்த 19ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் காலமானார். இந்நிலையில், திருச்சி எம்பியும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, அருணாச்சலம் இல்லத்திற்குச் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும், ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான பூவை மு.பாபு, அரசியல் ஆய்வு மைய செயலாளர் வழக்கறிஞர் ஆவடி அந்தரி தாஸ், தணிக்கைக் குழு உறுப்பினர் மணி, மாவட்டப் பொருளாளர் தனஞ்செயன், மாவட்ட துணைச் செயலாளர் விஜயராகவன், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் கைலாசம், நகர செயலாளர் பூவை சங்கர், ஆவடி மாநகர மாமன்ற உறுப்பினர் கார்த்திக் காமேஷ், நகர துணை செயலாளர் பக்தன், இளைஞரணி தினேஷ், பொதுக்குழு உறுப்பினர் வைகோ தாசன், மாவட்ட பிரதிநிதி கருணாநிதி உள்பட பலர் உடனிருந்தனர்.

The post மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் மறைவுக்கு துரை வைகோ நேரில் ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: