அப்போது கார் பெட்ரோல் பங்க் அருகே வந்துகொண்டிருந்தது. உடனே சிற்றரசு காரை நிறுத்தி, மகளையும் விரைவாக காரில் இருந்து இறக்கி, அங்கிருந்து தப்பி ஓடினர். கார் எரிந்து கொண்டு பெட்ரோல் பங்க் அருகே நின்றது. இதைக்கண்டு, பங்க்கின் உள்ளே வாகனத்தில் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். பெட்ரோல் பங்க்கில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பாணை எடுத்துவந்து காரில் ஏற்பட்ட தீயை அனைக்க முயன்றனர். இருப்பினும், காரின் முன்பக்கம் மளமள வென தீப் பற்றி எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தண்ணீர் பீய்ச்சி அடித்து காரில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருமங்கலம் மேம்பலம் முதல் கோயம்பேடு வரை ௳ாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து போலீசார் பல மணி நேரம் போராடி போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர். தீப்பற்றிய கார் பெட்ரோல் பங்க்குக்கு உள்ேள சென்றிருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்து இருக்கும். அது தவிர்க்கப்பட்டுள்ளது.
The post திருமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே பரபரப்பு திடீரென தீப்பற்றி எரிந்த கார்: தந்தை, மகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.