மீனவர் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை

மதுரை: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை கண்டித்தும், கைது செய்யும் மீனவர்களை மொட்டை அடிப்பதை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மீனவர் கூட்டமைப்பினர் நேற்று மதுரை கட்டபொம்மன் சிலை அருகே ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ரயில் மறியல் போராட்டத்துக்கு கிளம்பினர்.

அவர்களை ரயில் நிலைய நுழைவுவாயில் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் நிலைய நுழைவாயில் முன் முற்றுகையிட்டு ேகாஷமிட்ட சுமார் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post மீனவர் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: