பாக். எல்லை அருகே சீன டிரோன் கண்டெடுப்பு


சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே சந்தேகத்துக்கு இடமாக ஒரு டிரோன் பறந்ததாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள், எல்லை பகுதி அருகே உள்ள வயல்வெளிகளில் தீவிர சோதனை நடத்தினர். இதில் பாதி உடைந்த நிலையில் கிடந்த ஒரு டிரோன் கண்டெடுக்கப்பட்டது.

அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல் கடந்த 13ம் தேதி, எல்லை அருகே சீன டிரோன் ஒன்றை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கண்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.

The post பாக். எல்லை அருகே சீன டிரோன் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: