வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்திக்கு எதிராக இந்திய கம்யூ. வேட்பாளர் போட்டி

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு எதிராக இடதுசாரி கூட்டணி சார்பில் சிபிஐ தேசிய கவுன்சில் உறுப்பினர் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார். வயநாடு மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இந்தத் தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனேயே வயநாடு தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது இடதுசாரி கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி சார்பில் சிபிஐ தேசிய கவுன்சில் உறுப்பினரான சத்யன் மொகேரி போட்டியிடுவார் என்று இக்கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம் நேற்று அறிவித்தார். வயநாடு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டுள்ள சத்யன் மொகேரி, கடந்த 1987 முதல் 2001 வரை நாதாபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்திக்கு எதிராக இந்திய கம்யூ. வேட்பாளர் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: