தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து வெளியே வந்த 2 முதலைகள்

திருமலை: பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் இருந்து பெங்களூருவில் உள்ள பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு நேற்று 8 முதலைகள், ஒரு வெள்ளை புலி ஆகியவற்றை 2 லாரிகளில் கொண்டு சென்றனர். இதில் லாரி ஒன்று தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் மொண்டிகுட்டா கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 2 முதலைகள் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் முதலைளை மடக்கி பிடித்து வேறு லாரியை வரவழைத்து அதில் முதலைகள் அனுப்பி வைத்தனர்.

The post தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து வெளியே வந்த 2 முதலைகள் appeared first on Dinakaran.

Related Stories: