அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

புதுடெல்லி: அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பலியோ, காயங்களோ இல்லை. மகாராஷ்டிரா தலைநகர் மும்பை லோகமான்ய திலக் டெர்மினசுக்கும், திரிபுரா தலைநகர் அகர்தலாவுக்கும் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று அதிகாலை அகர்தலாவில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், லும்டிங்-பர்தர்பூர் மலை பாதை பிரிவில் உள்ள திபலாங்க் ரயில் நிலையம் அருகே வந்த போது ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு உயிர் சேதமோ,காயமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பாதையில் ரயில் போக்குவரதது பாதிக்கப்பட்டுள்ளது.

The post அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Related Stories: