இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்த நிகிதா போர்வால் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். டிவி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய நிகிதா, மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். தத்ரா மற்றும் நாகர் ஹவேலியைச் சேர்ந்த ரேகா பாண்டே 2ம் இடத்தையும்,குஜராத்தை சேர்ந்த ஆயுஷி டோலக்கியா 3ம் இடத்தை பிடித்துள்ளனர். மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள நிகிதா, உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக உலக அழகி போட்டியில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா, மனுஷி சில்லார் ஆகியோர் பட்டம் வென்றுள்ளனர்.
The post மிஸ் இந்தியாவாக நிகிதா தேர்வு appeared first on Dinakaran.