ஆவடியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் நேரு பேட்டி

 

ஆவடி, அக். 16: ஆவடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட அண்ணனூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சேக்காடு சுரங்கப்பாதையில் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது: சேக்காடு சுரங்கப்பாதை மற்றும் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. அங்கு வடிகால் அமைக்க ரூ.23 கோடி செலவாகும். முதல்வர் அனுமதியுடன் அதற்கு நிதி ஒதுக்கப்படும்.

அதேபோல், ஆவடி செயின்ட் பீட்டர் கல்லூரி அருகே கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளது. இந்த மூன்று பணிகளும் முடிந்த பின் ஆவடியில் மழை நீர் தேங்கி நிற்காது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார். அண்ணனூர், ரயில்வே மேம்பாலம் அருகே தண்ணீரை வெளியேற்ற குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆய்வின் போது, அமைச்சர் நாசர், மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மற்றும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post ஆவடியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் நேரு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: