திருவள்ளூர் உள்பட 8 மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

மணலி: சென்னை கலெக்டர் அறிவிப்பு: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு இலவச தொழிற்பயிற்சிகளை வழங்கிடவும் சிறப்பு முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முகாம் நடைபெறும் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். எனவே, இந்த மாவட்டங்களில் செயல்படும் தனியார் நிறுவன நிர்வாகிகள் சமூக பொறுப்புணர்வுடன் தங்களது நிறுவனங்களில் உள்ள பணிகளில் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய ஏதுவாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து பணி வாய்ப்பு வழங்க உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post திருவள்ளூர் உள்பட 8 மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: