சோழவரம் ஒன்றியத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

புழல்: சோழவரம் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ – மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் வழங்கினார். சோழவரம் ஒன்றியம், அலமாதி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 210 மாணவ – மாணவிகள், பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 287 மாணவ – மாணவிகள், சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 92 மாணவர்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 141 மாணவிகள், பூதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 94 மாணவ – மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

விழாவிற்கு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு துணை தலைவருமான வே.கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு, அந்தந்த பள்ளிகளில் பிளஸ்1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அலமாதி ஏகாம்பரம், பாடியநல்லூர் லலிதா, சோழவரம் லீலாவதி, மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கீதா ராமன், இன்னாசி, முகமது அலி, சிவகாமி, பூதூர் சேகர், பி.வி.ரமணா, டிசைன், எத்திராஜ், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சோழவரம் ஒன்றியத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Related Stories: