குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

திருவொற்றியூர்: எர்ணாவூர் காசிக்கோயில் குப்பத்தில் மீனவர்கள், பொதுமக்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதியின் கீழ், 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் வை.ம.அருள்தாசன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் நவகுமார் வை.ம.கண்ணதாசன், நிறுவன அதிகாரிகள் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: