இலங்கை கடற்படையினர் தொடர் அட்டகாசம் துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடித்து கொண்டிருந்தபோது, பெரிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்களை அச்சுறுத்தினர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர்‌ 50க்கும் மேற்பட்ட படகுகளை மீன் பிடிக்க விடாமல் விரட்டி, படகுகளை முட்டி மோதி மூழ்கடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் 10க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையின் பிடியில் சிக்காமல் தப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் அப்பகுதியில் இருந்த மீனவர்கள், வேறு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்கள் அனிவகுத்து நின்றதால், 15க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்காமல் நேற்று மாலை ராமேஸ்வரம் திரும்பின.

The post இலங்கை கடற்படையினர் தொடர் அட்டகாசம் துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவர்கள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: