பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய ஐடிஐ மாணவர்

சேலம்: மேட்டூரில் பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய ஐடிஐ மாணவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் அவ்வப்போது வாந்தி எடுத்து வந்துள்ளார். மேலும், அவரது வயிறு பெரிதாகி வந்துள்ளது. இதனை கவனித்த அவரது பெற்றோர், நேற்று முன்தினம் தனது மகளிடம் ஏன் இப்படி இருக்கிறாய்? எனக்கேட்டு விசாரித்துள்ளனர். அப்போது வயிறை பார்த்தபோது, அவர் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து வந்து, பரிசோதனை செய்ய வைத்துள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு, 7 மாத கர்ப்பிணியாக மாணவி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து, மாணவியின் பெற்றோரையும் அங்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையிலான போலீசார், மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், அம்மாணவி படித்து வந்த பள்ளியில் கடந்தாண்டு வரை படித்த மாணவர், அவரை காதலித்து வந்ததும், இருவரும் அவ்வப்போது தனிமையில் ஒன்றாக இருந்ததும் தெரியவந்தது. அதனால், மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

தற்போது 18 வயது கொண்ட அந்த மாணவர், ஐடிஐ படித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து மாணவியை காதலித்து கர்ப்பிணியாக்கிய ஐடிஐ மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய ஐடிஐ மாணவர் appeared first on Dinakaran.

Related Stories: