கோயிலுக்குள் சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: பூசாரி கைது

பெரியகுளம்: கோயிலுக்குள் அழைத்து சென்று சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பூசாரி, போக்சோவில் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக திலகர் (70) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை கோயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், சிறுமிக்கு இனிப்பு தந்து கோயிலுக்குள் அழைத்து சென்று அவர்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் சிறுமி பதறியடித்து கோயிலில் இருந்து வெளியே ஓடிவந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோயில் முன் திரண்டனர்.

இதனால் அச்சமடைந்த பூசாரி கோயிலுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். தகவலின்பேரில் பெரியகுளம் வடகரை போலீசார் வந்து, பூசாரியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன், சிறுமியின் உறவினர்கள் பூசாரியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், திலகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிறுவன், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து திலகரை கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர்.

The post கோயிலுக்குள் சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: பூசாரி கைது appeared first on Dinakaran.

Related Stories: